நட்பின் வலி!
காதலில் மட்டும் தான் வலி உண்டா? நட்பிலும் உண்டு, என்று நம்மால் நாம் உணர்ந்தோம்
கண்கள் கூறும் ஆறுதலுக்கு நிகர் இவ்வுலகில் வேரொண்றுமில்லையென்று உன்னால் நான் உணர்ந்த போது, கண்ணுக்கெட்டாத தூரத்தில் நாம்
காலத்தோடு வளர்ந்த நம் நட்பு தூரத்தால் கரைந்திடாமல் காத்து, நட்பிற்கு இலக்கணமாய் திகழ்வோமென அவர் அவர் பாதையில் இன்று நாம்
சோர்வுற்ற போது தாங்கிய உன் தோள்கள், கலங்கும் போது கண் துடைத்த உன் விரல்கள், குழம்பும் போது தெளிவு தந்த உன் கண்கள், இவை அனைத்தும் என்றும் இருக்கும் என்னுடன் நீ இல்லாத போதும்.
- ஹரினி.
இந்த பாட்டு எழுதுன ஹரினிக்கு ஒரு 'ஓ' போடுங்கபா!